Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

Published

on

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான Big match விளையாட்டு நேற்றைய தினமும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தொடரணியில் பதுளை கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்திற்கு அருகாமையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தில் குறித்த கெப் ரக வாகனம் மைதானத்தில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும் 09 பேர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களுள் இருவர் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த 09 பேரும் பதுளை வைத்தியசாலையில் 11 ம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.