Connect with us

உலகம்

குவைத்தில் நடைபெற இருக்கும் கால்பந்து

Published

on

குவைத்தில் அடுத்த அரேபிய வளைகுடா கால்பந்து கோப்பை போட்டிகள் நடைபெறும்:

குவைத்தில் அடுத்த அரேபியன் வளைகுடா கோப்பை சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளதாக
வளைகுடா கோப்பை கூட்டமைப்பின் தலைவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா பின் அகமது அல் தானி அறிவித்தார். சாம்பியன்ஷிப் டிசம்பர் 2024 இல் நடைபெறும். 26 வது அரேபிய வளைகுடா கோப்பையை நடத்துவதன் மூலம், குவைத் ஐந்து முறை போட்டிக்கான இடமாக மாறும். குவைத் இதற்கு முன்பு 1974, 1990, 2003-2004 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஷிப்பை நடத்தியது.

ஜாபிர் அல் அஹமட் சர்வதேச மைதானம், சுலைபிகாட் மைதானம் மற்றும் ஃபஹாஹீல் மைதானத்தில் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜாபிர் மைதானத்தில் 60,000 பேரும், சுலைபிகாட் மைதானத்தில் 15,000 பேரும், ஃபஹாஹீல் மைதானத்தில் 14,000 பேரும் பங்கேற்கலாம். அதேநேரம், மேலும் பல மைதானங்கள் கட்டப்படும் என்றும், பழையவை புதுப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்தனர். இவை சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் முடிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், ஈராக்கில் நடந்த சாம்பியன்ஷிப்பை காண 17 நாட்களில் 25,000 பேர் குவைத் எல்லையைத் தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாம்பியன்ஷிப்பைக் காண குவைத் நாட்டினர் ஈராக் செல்வதற்கான விதிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *