Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி உலகிற்கு முன்னுதாரணம்

Published

on

ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர்,கலாநிதி வணக்கத்திற்குரிய அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சேதவத்த, வேரகொட புராதன விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு இன்று (22) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே நந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க, ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் செயல்பாடானது நிச்சயமாக நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.