Connect with us

உள்நாட்டு செய்தி

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு பிரதமர் வழங்கிய உறுதி

Published

on

மனிதக் கடத்தலை நிறுத்துவதை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் உறுதியுடன் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (20) அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ’நீலுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு, பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் அவுஸ்திரேலிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளதாகவும் அவுஸ்திரேலிய சுற்றுலாவை இலங்கைக்கு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆர்வமாக உள்ளதாகவும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.