Connect with us

உள்நாட்டு செய்தி

உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்த ஏற்பாடு

Published

on

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.