Connect with us

உலகம்

பைடன் ரஸ்யாவுக்கு எச்சரிக்கை

Published

on

உக்ரைன் மீது ரஸ்ய தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பைடன் கூறுகையில், “உக்ரைன் மீதான ரஸ்ய தாக்குதலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம், உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஸ்யா குறிவைத்தால், நாங்கள் ரஸ்யாவுடன் நேரடி மோதலை நாடவில்லை என்றாலும், நாங்கள் கடுமையாக பதிலடி கொடுப்போம்” என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.