Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று முதல் வழமைப்போன்று கல்விச் செயற்பாடுகள்

Published

on

இன்று (10) முதல் அனைத்து மாணவர்களும் வழமை போன்று பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.