Connect with us

உள்நாட்டு செய்தி

வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க தயாராகும் பெசில்

Published

on

2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம்.

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவியேற்ற பின் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அத்தோடு இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான சமகால அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம்.

வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பிப்பார் என பாராளுமன்றப் பொதுச் செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.