Connect with us

Sports

நியூசிலாந்து கனவு நனவாகும் தருணம்

Published

on

உலகக் கிண்ண T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது.

நேற்று அபுதாபியில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது.

இதன் மூலமே நியூசிலாந்து அணி இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

போட்டியில் இங்கிலாந்து அணி 220 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு 167 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய நியூசிலாந்து 19 ஆவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

இதேவேளை இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் டுபாயில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.