Connect with us

உலகம்

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் பிரேரணை நிறைவேற்றம்

Published

on

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் பிரேரணை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை இன்று தாக்கல் செய்யயப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் பேரவையில் இன்று காலை குறித்த பிரேரணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

பிரேரணை மீதான் விவாதம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

விவாதத்தின் நிறைவில் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.