Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளை மாவட்டத்தில் மத்தியஸ்த்த சபைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

Published

on


பதுளை மாவட்டத்தில் மத்தியஸ்த்த சபைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடதொகுதியில் நேற்று (05) இடம்பெற்ற நீதியமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் தாம் இதனை வலியுறுத்தியதாக அரவிந்தகமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதியமைச்சர் அலி சப்ரி குறித்த இணக்கப்பாட்டினை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் 3 வருடங்களுக்குள் ஹப்புத்தளை அல்லது ஹல்தமுல்ல பகுதிகளில் புதிய நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கும் அந்த கூட்டத்தின் போது அனுமதி கிடைக்கப்பெற்றதாக அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழும் பதுளை, மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொழில் நீதிமன்றங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன் வைத்த நிலையில் அதற்கும், கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *