Connect with us

உள்நாட்டு செய்தி

WHO இலங்கை தொடர்பில் வெளியிட்ட தகவல்

Published

on

செப்டம்பர் இலக்கிற்கு முன்னர் இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் அவர் ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் எடுக்கும் முயற்சிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் நன்றி தெரிவித்துள்ளார்.