Connect with us

உள்நாட்டு செய்தி

சீரற்ற வானிலை: இதுவரை இருவர் பலி-DMC

Published

on


நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, கம்பளை, தொலஸ்பாகை வின்டபோரஸ்ட் பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பளை பகுதியில் நேற்றிரவு முதல் அடை மழை பெய்துவருகின்றது.
இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டுக்கு பெரும் தேசம் ஏற்பட்டுள்ளது.

பிரதேச வாசிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்ணுக்குள் புதையுண்டனரை மீட்டனர்.

எனினும், அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளளார்.