Connect with us

உலகம்

George Floyd கொலை: பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை

Published

on

ஜோர்ஜ் ப்ளொய்டை (George Floyd) கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை மற்றும் அதிகாரம் கொண்ட கடமையை துஷ்பிரயோகம் செய்தமை, ப்ளொய்டுக்கு இழைத்த கொடுமை ஆகிய காரணங்களால் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 45 வயதான Derek Chauvin-க்கு 22 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை ப்ளொய்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

48 வயதான ஜோர்ஜ் ப்ளொய்ட் கடந்த வருடம் மே மாதம் Derek Chauvin எனும் பொலிஸ் உத்தியோகத்தரினால் வீதியில் வைத்து கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *