Connect with us

உள்நாட்டு செய்தி

சில மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கை

Published

on

கொழும்பு, காலி, கம்பஹா, மாத்தறை, கேகாலை, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்மேடு சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், நிலம் தாழ் இறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து தெடர்ந்தும் அவதானமாக செயற்பபடுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், களுத்துறை, நுவரெலிய, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.