Connect with us

உள்நாட்டு செய்தி

மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமா?

Published

on

மே மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் அடுத்த வாரத்திலும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (22) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.