Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் நேற்று 892 தொற்றாளர்கள், 7 மரணங்கள்

Published

on

இலங்கையில் நேற்று (28) கொவிட் தொற்றால் எழுவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று பதிவான மரணங்களில் 4 மரணங்கள் கொழும்பு மாவட்டத்திற்குள்ளேயே பதிவானதுடன், ஏனையவை கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பதிவாகின.

நேற்று உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்

• கொழும்பு 6 பகுதியில் வசித்த 86 வயதான ஆண்
• கொழும்பு 6 பகுதியில் வசித்த 67 வயதான பெண்
• கொழும்பு 13 இல் வசித்த 61 வயதான ஆண்
• 61 வயதான சிறைக்கைதி
• கம்பஹா நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்
• எடேரூமுல்ல பகுதியில் வசித்த 62 வயதான ஆண்
• இரத்தினபுரி கல்லெல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்.

இலங்கையில் நேற்று (28) 892 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 61,586 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொட, மினுவாங்கொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 57,630 ஆக உயர்வடைந்துள்ளது.

6,854 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய நாளில் 1,869 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54,435 ஆக உயர்ந்துள்ளது.