Connect with us

உள்நாட்டு செய்தி

உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் தமிழக மீனவர்கள்

Published

on

நடுக்கடலில் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோரியும், இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர் வரும் வரும் 24 ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயல் பட்டு வரும் இலங்கை அரசை கண்டித்தும் எதிர் வரும் 24 ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.