Connect with us

Uncategorized

தனியார்மயமாகிறதா?தாமரை கோபுரம்

Published

on

கொழும்பில் உள்ள தாமரைக் கோபுரம் பெர்சனல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஏற்கனவே நாட்டை சூரையாடிய கும்பலை மீண்டும் அழைத்து வர ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் முயற்சி செய்கிறார். உங்களின் கீழ் நாடு நன்றாக செல்லும் என்று நினைத்தோம். இன்று திருடர்களுடன் திருடர்கள் சேர்ந்து உள்ளனர். அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு லோட்டஸ் டவர் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. என கடுமையாக தெரிவித்தார்.