Connect with us

உலகம்

சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று

Published

on

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,656 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உலகின் முதல் கொவிட்-19 வைரஸ் தொற்று சீனாவின் வுஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொவிட் வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. 
கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொவிட் தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. 
இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 29,157 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். 
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 31,656 பேருக்கு கொவிட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 27,646 பேருக்கு அறிகுறி இல்லாத கொவிட் தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொவிட் வைரஸால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 
சீனாவில் இதுவரை கொவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆகும். மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,97,516 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *