Connect with us

உள்நாட்டு செய்தி

சமுர்த்தி நிவாரண உதவியைப் பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Published

on

குறைந்த வருமானம் பெறும், கஷ்டமான குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உதவியைப் பெறுவதற்காக புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பியும் பாஸ்குவல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் பலர் சமுர்த்திப் பயனாளிக்கான தகுதி இருந்தும் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிககம் (06) பாராளுமன்றத்தில்  கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்