Connect with us

உள்நாட்டு செய்தி

அவசரகால சட்டத்தை நீட்டிக்க போவதில்லை

Published

on

அவசரகால சட்டத்தை மீண்டும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதால் அவசரகால சட்டத்தை நீட்டிக்க போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்ப பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு டயஸ்போராக்களின் உதவி முக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.