Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் நெருக்கடி: கல்வியமைச்சு எடுத்துள்ள அதிரடி முடிவு

Published

on

எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்மித்த நகர பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களில் உள்ள பிரதான நகர படசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.