Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை மீண்டெழ ஒத்துழைப்பு வழங்க தயார்- இந்திய வௌியுறவு செயலாளர்

Published

on

நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வௌியுறவு செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்த இந்திய தூதுக்குழுவினர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போதே வினய் குவாத்ரா இதனை கூறியுள்ளார்.