Connect with us

உலகம்

சரணடைந்த ரஷிய வீரருக்கு உக்ரைன் மக்கள் கொடுத்த உபசரிப்பு

Published

on

சரணடைந்த ரஷிய வீரருக்கு உக்ரைன் மக்கள் டீ, உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது 8வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், சில ரஷிய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கீவ் நகர் அருகே ரஷிய பாதுகாப்பு படை வீரர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைனியர்களிடம் சரணடைந்தார்.

சரணடைந்த ரஷிய வீரருக்கு உக்ரைன் மக்கள் டீ, உணவு கொடுத்தனர்.

இந்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.