Connect with us

உலகம்

கடந்த 2021 ஆம் ஆண்டில் 488 ஊடகவியலாளர்கள் கைது

Published

on

உலகம் முழுவதும் முதன்முறையாக கடந்த 2021 ஆம் ஆண்டில் 488 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பெரீஸ் நகரை அடிப்படையாக கொண்ட எல்லைகள் இல்லா நிருபர்கள் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், தங்களுடைய பணிகளின் நிமித்தம் உலகம் முழுவதும் 488 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

சீனா (127) பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.

இதனை தொடர்ந்து, மியான்மர் (53), வியட்னாம் (43) மற்றும் பெலாரஸ் (32) ஆகிய நாடுகள் உள்ளன.

உலகம் முழுவதும் சர்வாதிகார போக்கின் பிரதிபலிப்பு இது என்று அந்த குழுவின் பொது செயலாளர் டெலாயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *